தர்மபுரி மாவட்டத்தில் உள்ள இண்டமங்கலம் ஊராட்சி சேர்ந்த 2 வார்டு உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றனர். அவர்கள் மாவட்ட ஆட்சியரின் கார் முன்பாக திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். எங்கள் ஊராட்சியில் மாதாந்திர கூட்டம் கடந்த ஒரு வருடமாக நடைபெறவில்லை. நாங்களும் பதிவேடுகளில் கையெழுத்து போடவில்லை. ஆனால் எங்கள் கையெழுத்தை வேறு யாரோ போட்டுள்ளனர்.

எனவே அந்த கையெழுத்தை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இதே போல அனைத்து பதிவேடுகளையும் ஆய்வு செய்து ஊராட்சி நிர்வாக செயல்பாடுகள் குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.