திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு அழைத்து செல்பவர்களின் பற்கள் பிடுங்கிய விவகாரம் குறித்து ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது சார் ஆட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பான வழக்கு விசாரணை மாநில மனித உரிமை ஆணையம் மற்றும் தேசிய மனித உரிமை ஆணையத்திலும் நடைபெறுகிறது. இந்த விவகாரத்தில் ஏஎஸ்பி பல்வீர் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பல்வீர் சிங்கால் பாதிக்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாரியப்பன் என்பவர் தனக்கு உரிய முறையில் சிகிச்சை வழங்கப்படவில்லை எனவும் அடிக்கடி போலீசார் தன்னிடம் விசாரணை நடத்துவதாகவும் கூறியுள்ளார். இதன் காரணமாக தற்போது நான் தனியார் மருத்துவமனைக்கு செல்ல இருப்பதாகவும் மாரியப்பன் கூறியுள்ளார். அதன் பிறகு என்னுடைய பிறப்புறுப்பிலும் தாக்கியதாக மாரியப்பன் குற்றம் சாட்டியுள்ள நிலையில் நாங்கள் குற்றவாளியை பிடித்துக் கொடுத்தோம் என்ற ஒரு காரணத்திற்காக எங்கள் வேலையை நீங்கள் எதற்காக செய்தீர்கள் என்று கூறி தாக்கியதாகவும் மாரியப்பன் கூறியுள்ளார்.