பல போராட்டங்களை கடந்து வந்து தற்போது அதிமுகவின் 8 ஆவது பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை எடப்பாடி அணியினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போட்டு வருகிறார் ஸ்டாலின்.

அதிமுக ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும் என்று எச்சரித்துள்ளார் இபிஎஸ். எதிர்க்கட்சியை அழிக்க, ஒழிக்க வேண்டும் என்று ஆளும் கட்சி செயல்பட்டு வருகிறது. ஆனால் அது பலிக்காது, கானல் நீராகத் தான் மாறும். அதிமுகவை எந்த கட்சியும் வெல்ல முடியாது. குடும்பத்துக்காக உருவாக்கப்பட்ட கட்சி திமுக என்றார்.