சமூக வலைதளத்தில் அவ்வப்போது ஏதேனும் ஒரு சம்பவம் வைரலாக வெளியாவது வழக்கம். புதிய புதிய கண்டுபிடிப்புகள், விலங்குகளின் சேட்டைகள், குழந்தைகளின் குறும்புகள் என காணொளிகளாக சமூக வலைதளத்தில் வெளியாகும். அவ்வகையில் தற்போது ட்விட்டர் வலைதளத்தில் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் குழந்தை ஒன்று மழை பெய்து கொண்டிருக்கும் சமயத்தில் விநாயகரை பார்த்து வணங்கி கொண்டு இருந்தது. திடீரென குழந்தை ரெயின் கோட் எங்கே என்று கேட்டது. அதன் பிறகு மீண்டும் விநாயகருக்கு ரெயின் கோட் எங்கே என்று தனது மழலை குரலில் மராத்தி மொழியில் கேட்டுள்ளது. இந்த காணொளி தற்போது வைரல் ஆகி வரும் நிலையில் காணொளியை பார்த்தவர்கள் குழந்தையின் நல்ல மனதை பாராட்டி வருகின்றனர்.

வீடியோவை காண