நடிகர் விக்ரம் ஒரு காலத்தில் விஜய் , அஜித், சூர்யாவுக்கு இணையாக விக்ரமும் நாயகனாக வலம் வந்து கொண்டிருந்தார். ஆனால் தற்போது தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறார்.

இதற்கிடையில் விக்ரம் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கும் தங்கலான் திரைப்படத்திற்கு 22 கோடி சம்பளம் பெற ஒப்பந்தம் மேற்கொண்ட நிலையில் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே விக்ரம் தன்னுடைய சம்பளத்தை 30 கோடி ரூபாய் உயர்த்திருக்கிறார்.

படத்தின் மீது உள்ள நம்பிக்கையால் தான் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே சம்பளத்தை உயர்த்துகிறார் எனவும் தகவல் கசிந்துள்ளன.