நடிகர் சூர்யாவின் 42வது படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இப்படத்தில் ஹாலிவுட் முன்னணி நடிகை திஷா பதானி நடித்து வருகிறார். இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் பெரும் பொருட் செலவில் உருவாக்கப்பட்டு வருகிறது.

இதை அடுத்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் சீதாராம் படத்தின் இயக்குனர் இயக்கும் அடுத்த படத்தில் சூர்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இப்படமும் பான் இந்தியா திரைப்படமாக உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இதனால் சூர்யா ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.