ஓ.பி.எஸ் அணி சார்பில் தொடங்கப்பட்ட”நமது புரட்சித் தொண்டன்”புதிய நாளிதழ்  வெளியீட்டு விழாவில் பேசிய மூத்த தலைவர் பண்ருட்டி இராமச்சந்திரன்,  ”நமது புரட்சித் தொண்டன்” நாளேட்டை வெளியிடுகின்ற இந்த சிறப்பு விழாவில் கலந்து கொண்டு உங்களை காணுகின்ற வாய்ப்பை தந்த அருமை நண்பர்களுக்கு என் இதயமார்ந்த  நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நம்முடைய இதயங்களில் இன்று குடி இருக்கின்ற  ஓபிஎஸ் அவர்கள் சிறப்புரை வழங்க இருக்கிறார்கள். அதற்கு முன்பு நம்மை சேர்ந்தவர்களும், சார்ந்தவர்களும் இங்கே வாழ்த்துரை வழங்கி இருக்கிறார்கள். அருமை நண்பர்கள் வாழ்த்துரை  வழங்கிய பொழுது, ஏதோ திருமண வீட்டில் மொய் எழுதுவதைப் போல எனக்கு எதிரே அமர்ந்திருக்கிற நீங்கள் எல்லாம் மொய் எழுதினீர்கள். நமது புரட்சித் தொண்டன் நாளேட்டுக்கு…

ஆங்கிலத்தில் சொல்வார்கள் ( well begun is half done) என்று சொல்வார்கள். விளையும் பயிர் முளையில் தெரியும் என்பார்கள், ஆகவே புரட்சி தொண்டன்  தமிழ்நாட்டை மட்டுமல்ல,  உலகையே ஆழ்வானோ என்கின்ற சந்தேகம் எனக்கு நிச்சயமாக இருக்கிறது. இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல் என்றார்  திருவள்ளுவர்.

திருவள்ளுவர் என்ன நினைத்து சொன்னாரோ தெரியவில்லை. ஆனால் நம்முடைய அன்பிற்குரிய ஓபிஎஸ் அவர்கள் இருந்த பணியை மருது அழகுராஜ் இடத்தில் ஒப்படைத்தது அந்த திருக்குறளுக்கு சான்றாக இருக்கிறது. யார் கையிலே இந்த குழந்தையை ஒப்படைத்தால் சிறப்பாக சீராட்டி நல்ல முறையில் வளர்ப்பார் என்று அறிந்து,  மருது அழகுராஜ்  அவர்கள் கையிலே ஒப்படைத்தார்கள். அவர் நல்ல தமிழிலேயே…  நம்ம எல்லாம் இன்றைக்கு தாலாட்டி தூங்கவே வைத்தார்கள் என்று சொன்னால் கூட அது மிகையாகாது. ஆகவே அது வளர்ச்சிக்கு அறிகுறி என தெரிவித்தார்.