தமிழ் சினிமாவில் பிரபலமான  இயக்குனராகவும் நடிகராகவும் இருப்பவர் பாக்யராஜ். இவருடைய மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர் சாந்தனு. இவருடைய நடிப்பில் அண்மையில் இராவண கோட்டம் என்ற திரைப்படம் வெளியானது. இந்நிலையில் இராவண கோட்டம் படத்தின் சூட்டிங் ஒரு கிராமத்தில் நடைபெற்ற போது அங்குள்ள ஒரு பள்ளிக்கு நடிகர் சாந்தனு சென்றுள்ளார்.

அப்போது அங்கிருந்த ஹெட் மாஸ்டர் உங்கள் அப்பாவின் ஜாதி என்ன என்று வெளிப்படையாக கேட்டுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியான சாந்தனு ஜாதி பற்றி கூறியிருக்கிறார். அதன் பிறகு தான் தலைமையாசிரியர் சாந்தனுவுக்கு காபி கொடுத்துள்ளார். மேலும் இந்த தகவலை ஒரு பேட்டியில் நடிகர் சாந்தனுவே கூறி இருக்கிறார்.