தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ராம்சரண். இவருடைய தந்தை மெகா ஸ்டார் சிரஞ்சீவி. நடிகர் ராம்சரண் ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். இந்நிலையில் நடிகர் ராம் சரணின் மனைவி உபாசனா 10 வருடங்களுக்கு பின்பு கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில் 10 வருடங்களுக்கு பிறகு கர்ப்பமான தன் ரகசியத்தை தற்போது உபாசானா தெரிவித்துள்ளார். அதாவது திருமணமான புதிதிலிருந்தே கரு முட்டைகளை சேர்த்து வைத்ததாக உபாசனா தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் தான் பெரும்பாலும் கருமுட்டைகளை சேர்த்து வைப்பார்கள்.

ஆனால் தற்போது இந்தியாவிலும் அந்த கலாச்சாரம் வர தொடங்கிவிட்டது. இந்நிலையில் உபாசானவும் திருமணமான புதிதில் இருந்தே கரு முட்டைகளை சேர்த்து வைத்ததாக தற்போது தெரிவித்துள்ளார். மேலும் ராம்சரண் மற்றும் உபாசனா காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் அந்த சமயத்தில் பொருளாதார நிலை சரிவர இல்லாததால் தங்கள் குழந்தையை வரவேற்க அவர்கள் தயாராக இல்லை. தற்போது அவர்களின் பொருளாதார நிலை சீராக இருப்பதால் தங்கள் குழந்தையை நன்றாக வளர்க்க முடியும் என்ற நம்பிக்கை வந்துள்ளதால் தான் தற்போது குழந்தை பெற்று எடுக்க முடிவு செய்துள்ளதாக உபாசனா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.