தமிழ் சினிமாவில் அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ஐஸ்வர்யா ராஜேஷ் அதன் பிறகு தான் நடித்த பல சூப்பர் ஹிட் படங்கள் மூலம் முன்னணி ஹீரோயினாக உயர்ந்தார். தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அண்மையில் பர்கானா திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிகை ராஷ்மிகா மந்தனாவை விட நானே புஷ்பா படத்தில் நன்றாக நடித்திருப்பேன் என கூறியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ஒரு பேட்டியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாவது, தெலுங்கில் நான் ஒரு நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். புஷ்பா திரைப்படத்தில் வரும் ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் எனக்கு கிடைத்திருந்தால் உடனே ஒப்புக் கொண்டிருப்பேன். அந்தப் படத்தில் ராஷ்மிகாவை விட நான் நன்றாகவே நடித்திருப்பேன் என்று கூறியுள்ளார். மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் திடீரென இப்படி கூறியது ராஷ்மிகா மந்தனா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.