தமிழ் சினிமாவில் ஒரே காலத்தில் அறிமுகம் ஆகி தற்போது அசுர வளர்ச்சி அடைந்திருப்பவர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் இசையமைப்பாளர்‌ அனிருத். சிவகார்த்திகேயன் மெரினா படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானாலும் திரைப்படத்தின் மூலம் தான் கவனிக்கப்படும் நடிகர்களில் ஒருவராக மாறினார். இந்த படத்தின் மூலம் தான் இசையமைப்பாளர் அனிருத்தும் அறிமுகமானார். அதன் பிறகு பல வெற்றி படங்களை கொடுத்து சிவகார்த்திகேயன் முன்னணி நடிகராக உயர பல சூப்பர் ஹிட் பாடல்களின் மூலம் அனிருத்தும்  முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்துள்ளார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் இடையே பிரச்சனை இருப்பதாக சமீப காலமாகவே தகவல் பரவி வருகிறது.

அதாவது சிவகார்த்திகேயனின் பல படங்களுக்கு இசையமைத்த  அனிருத் தற்போது அவர் நடித்து  வரும் மாவீரன் மற்றும் கமல் தயாரிப்பில் நடிக்க இருக்கும் படம் போன்றவற்றிற்கு இசையமைக்க முடியாது என கூறிவிட்டார். இதனால் அவர்களுக்கிடையே பிரச்சனை இருப்பதாக தகவல் பரவி வந்த நிலையில் தற்போது அது குறித்த காரணம் வெளிவந்துள்ளது. அதாவது இசையமைப்பாளர் அனிருத் தற்போது பல படங்களில் பிஸியாக இருப்பதால்தான் அவரால் சிவகார்த்திகேயன் படங்களில் ஒப்பந்தமாக முடியவில்லையாம். மற்றபடி சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் இடையே எந்த பிரச்சனையும் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.