தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களாக வலம் வருபவர்கள் தல அஜித், தளபதி விஜய், தனுஷ், சூர்யா. நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். நடிகர் அஜித் ஏகே 62 படத்திற்காக தயாராகி வருகிறார். நடிகர் சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 படத்திலும் தனுஷ் கேப்டன் மில்லர் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபல பாலிவுட் விமர்சகர் உமர்சந்து தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களான விஜய், அஜித், சூர்யா மற்றும் தனுஷ் ஆகியோர் குறித்து மோசமாக பதிவிட்டுள்ளார்.

அதாவது நடிகர் விஜய்க்கும் கீர்த்தி சுரேஷுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வருவதாக உமர் சந்து பதிவிட்டு இருந்த நிலையில் வேறொரு பெண்ணுடனும் விஜய்க்கு தொடர்பு இருப்பதாகவும் இதனால் அவர் மனைவி சங்கீதா பயங்கரமாக சண்டை போட்டதாகவும் பதிவிட்டுள்ளார். இதேபோன்று நடிகர் அஜித் ஷாலினிக்கு துரோகம் செய்துவிட்டு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக உமர் சந்து பதிவிட்டு இருந்தார்.

நடிகர் சூர்யா பாலிவுட் நடிகை திஷா பதானியை அடிக்கடி கேரவனுக்குள் அழைத்துச் செல்வதாக பதிவிட்டிருந்தார். நடிகர் தனுஷ் வேறு பெண்ணுடன் உறவு வைத்துக் கொண்டு ஐஸ்வர்யாவுக்கு துரோகம் செய்துவிட்டதாக பதிவிட்டிருந்தார். இப்படி தமிழ் நடிகர்களை சீண்டி மிகவும் மோசமான முறையில் உமர் சந்து பதிவிட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உமர் சந்துவின் சர்ச்சை பதிவால் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி நெட்டிசன்கள் பலரும் விளாசி வருகிறார்கள்.