செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், நான் தாமிரபரணியை பாதுகாக்கணும் என நடைபயணம் பாபநாசம் இலிருந்து புன்னகையால் வரைக்கும் வந்து இருந்தேன். அப்ப எங்களுடைய நோக்கம் என்னன்னா…. இந்த தாமிரபரணி தண்ணி வற்றாத ஜீவநதி. ஒரே ஒரு பெருநதினா அது தாமிரபரணி. இதை நாம்  கெடுத்துட்டோம்… நாசப்படுத்திட்டோம்… மாசு படுத்திட்டோம்…  பாபநாசத்தில் தொடங்கி புன்னகையால் வரைக்கும் திட கழிவு, ரசாயன கழிவு எல்லா கழிவும் உள்ள போட்டு நாசப்படுத்திட்டோம்.  அதில் இந்த தண்ணி எல்லாம் 10 கிலோ மீட்டருக்கு ஒரு  செக்  டேம் கட்டணும்.

இந்த தண்ணிய கருமேனியாறு, நம்பியாறு, கோரையாறு,  பச்சையாறு எலுமிச்சை ஆறு திட்டத்தை நிறைவேற்றும்..  அது டைவர்ட் பண்ணலாம்…  இந்த திட்டத்தில் டைவர்ட் பண்ணிருந்தீங்கன்னா… தண்ணீர்  உள்வாங்கி இருக்கும்… அது இல்லையே…

நீர்வளத்துறை அமைச்சர் சொன்னாரு….  டிசம்பர் திட்டம் நிறைவேறும்….  எப்ப சொன்னாரு ? போன வருஷம் சொன்னாரு….  இப்ப ட்ரையல்  பாக்கணும்னு அவசியம் கிடையாது…  அது தானாக ட்ரையல் பார்த்துருச்சு….  தானாக ட்ரெயில் ஆயிடுச்சு….   இது ரொம்ப  மோசமான சூழல்…    திட்டமிடாத ஒரு சூழல் இருக்கு.. தென் மாவட்டங்கள் என்றாலே  சாதாரண வேலை வாய்ப்பு இல்ல… வாழ்வாதாரம் இல்லை… அப்படின்ற நிலைப்பாடு இருக்கு…. அதை எல்லாம் மாற்றி அமைக்க வேண்டும் என தெரிவித்தார்.