தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. ஆனால் தொடர் மழையை பொருட்படுத்தாமல் தூய்மை பணியாளர்கள் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் என அனைத்தையும் அகற்றி சுத்தம் செய்கின்றனர். இந்நிலையில் 40-வது வார்டு கவுன்சிலர் நீலகண்டன் மற்றும் வார்டு குடியிருப்போர் நல சங்கத்தின் உறுப்பினர்கள் இணைந்து தங்களது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மை பணியினை சிறப்பாக செய்த 20 தூய்மை பணியாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர். இதனையடுத்து அவர்களுக்கு மழை கோட் வழங்கியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் வட்ட செயலாளர் பரமசிவன், வட்ட பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.