தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் டெல்டா மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. நேற்று முன்தினம் பகலில் மழை பெய்யாமல் வெயில் சுட்டெரித்தது. ஆனால் மாலை மற்றும் இரவு நேரத்தில் மழை பெய்தது. இந்நிலையில் கனமழைக்கு தாக்குபிடிக்காமல் இரண்டு ஓட்டு வீடுகள் சேதுமடைந்தது. இது குறித்து அறிந்த வருவாய்த்துறையினர் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டனர்.