திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாலை சீவலப்பேரி ரோடு செந்தில் நகரில் நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாலி மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவரது அண்ணன் மகன் பிரசாத் கண்ணன் என்பவரும் காய்கறி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நாகராஜனுக்கும் அவரது அண்ணன் பால்ராஜ் குடும்பத்தினருக்கும் இடையே சொத்து பிரச்சனை காரணமாக தகராறு இருந்தது.

நேற்று அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டபோது கோபத்தில் பிரசாத் கண்ணன் தனது சித்தப்பா நாகராஜனை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் படுகாயமடைந்த நாகராஜனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரசாத் கண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.