திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில்  தலையணை அமைந்துள்ளது. இங்கு  குளிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். கடந்த சில நாட்களாக களக்காட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.

நேற்று இரவு கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தலையணை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் அருவியில் குறிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் தலையணையை சுற்றி பார்த்து செல்கின்றனர்.