தஞ்சாவூர் மாவட்டத்தில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி கண்ணம்மாள் சென்னையில் இருக்கும் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தீபாவளி விடுமுறை முன்னிட்டு சுப்ரமணியன் தனது மனைவி மகன் ஆகியோருடன் சொந்த ஊரான காரைக்குடிக்கு சென்றார். அவர்கள் மூன்று பேரும் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு காருக்கு அருகே வந்தனர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் கண்ணம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பிடித்து இழுத்தார். உடனே கண்ணம்மாள் விடாமல் சங்கிலியை இறுக்க பிடித்துக் கொண்டதால் மர்ம நபரின் கையில் 3 பவுன் சங்கிலி மட்டும் சிக்கியது. கண்ணிமைக்கும் நேரத்தில் மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து கண்ணம்மாள் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.