காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் பொதுப்பணி துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் 909 ஏரிகளில் 99 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது. மேலும் 24 மணி நேரத்தில் பெய்த கனமழை காரணமாக ஒரே நாளில் 39 ஏரிகள் நிரம்பியது.

அதன்படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் 149 ஏரிகள் 75 சதவீதத்திற்கும் மேலும், 233 ஏரிகள் 50 சதவீதத்திற்கு மேலும், 134 ஏரிகள் 25 சதவீதத்திற்கும் நிரம்பியது. இந்த தகவலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறினர்.