காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ராஜாஜி மார்க்கெட் அருகே டாஸ்மாக் அமைந்துள்ளது. இந்த கடைக்கு வந்து மது பிரியர்கள் மது வாங்கிவிட்டு சாலையோரம் அமர்ந்து அங்கேயே குடித்து வருகின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். சில நேரம் போதையில் கும்பலாக நின்று சிலர் ரகளை செய்கின்றனர்.

பொதுமக்கள் அதிகமாக கூடும் இடமான ராஜாஜி மார்க்கெட்டுக்கு செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே மதுக்கடையை அகற்றி சாலையில் அமருந்து மாது குடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.