சீனாவுடன் இரண்டு ஆண்டுகளில் போர் நடைபெறலாம் என அமெரிக்க விமானப்படை அதிகாரி எச்சரித்துள்ளார். அமெரிக்க விமான படையின் இயக்க தளபதி தலைமை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இதில் வரும் 2025 ஆம் ஆண்டில் சீனாவுடன் போரிடவோம் என்றும் அதற்கு வீரர்கள் தயாராக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதற்கு அமெரிக்காவின் இராணுவ தலைமையக அதிகாரிகள் சீனாவின் மீது எங்களது துறை ரீதியான கருத்தினை பிரதிபலிக்கும் வகையில் இந்த விமர்சனங்கள் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆனால் தைவானுக்கு ஆதரவான நிலைப்பாட்டை அமெரிக்கா கடந்த காலத்தில் அறிவித்துள்ளதால் சீனாவின் நடவடிக்கைகள் போருக்கான சூழலை ஏற்படுத்தும் வகையிலேயே உள்ளது என அமெரிக்காவின் பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.