பொன்னியின் செல்வன் படம் ஹிட்டான பின் நடிகை திரிஷா மீண்டும் முன்னணிக்கு வந்துள்ளார். இப்போது அவர் தளபதி விஜய்க்கு ஜோடியாக லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் விரைவில் பொன்னியின் செல்வன்-2 படம் வெளியாக இருப்பதால் அதற்கான புரோமோஷன் நிகழ்ச்சிகளில் இப்போது திரிஷா பங்கேற்று வருகிறார்.

இந்த நிலையில் கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரிஷா மேடையில் பேசியதாவது, தொகுப்பாளர் அஞ்சனா “உங்களுக்கு எப்போ திருமணம்? அதற்கு நாங்கள் வரலாமா” என கேட்டார். அதற்கு “என் உயிர் அவங்களோடு அப்படியே இருந்துட்டு போகட்டும் இப்போதைக்கு” என ரசிகர்களை காட்டி இருக்கிறார் திரிஷா. இதனை விட அசால்டாக இந்த கேள்வியை வேறு யாரும் handle செய்ய முடியாது என்று அஞ்சனா திரிஷாவை விமர்சித்திருக்கிறார்.