மார்க் ஆண்டனி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஷால் அவர்கள் அளித்த வாக்குறுதி ஒன்று மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

புரட்சித் தளபதி என்று அழைக்கப்படும் விஷால் மற்றும் நடிப்பு அரக்கன் எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. கோலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களாக விளங்கும் சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோர் நடிப்பில் வெளியான பத்து தல, வாத்தி, மாவீரன் உள்ளிட்ட திரைப்படங்களின் முதல் நாள் வசூலை முறியடித்து மார்க் ஆண்டனி திரைப்படம் சாதனை படைத்துள்ளது.

இது விஷால் அவர்களின் சிறந்த கம்பேக்  திரைப்படமாக பார்க்கப்பட்டு வரும் சூழ்நிலையில், பலரும் அவருக்கு பாராட்டுகளை சமூக வலைதளங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மார்க் ஆண்டனியின் வெற்றியை தொடர்ந்து ஓர் அறிவிப்பு ஒன்றை விஷால் அவர்கள் வெளியிட்டு இருக்கிறார். அதில், மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கான ஒவ்வொரு டிக்கெட் விலையில் இருந்தும்  1 ரூபாயை விவசாயிகளுக்கு நன்கொடையாக வழங்க இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இவருடைய இந்த வாக்குறுதி பெரும் வரவேற்பை பெற்று அவருக்கு வாழ்த்துக்கள் தற்போது குவிந்த வண்ணம் உள்ளன.