திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செங்கம் போளூர் நெடுஞ்சாலையில் தனியார் ரைஸ்மில் அமைந்துள்ளது. இந்த ரைஸ் மில்லில் இருக்கும் வளாகத்தில் மீன் கடை உள்ளது. இந்நிலையில் மின் கடைக்குள் சமூக விரோதிகள் நுழையாமல் இருப்பதற்காக பூனை மற்றும் நாயை வளர்த்து வருகின்றனர். அந்த நாயும், பூனையும் பாசமாக கொஞ்சி விளையாடுகிறது.

இந்நிலையில் நாய் பாசத்துடன் பூனைக்கு பால் கொடுக்கிறது. அதனை குடித்துவிட்டு பூனை மகிழ்ச்சியாக சுற்றி திரிகிறது. இதனை அந்த பகுதியில் வசிக்கும் போது மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.