தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்ததாக அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இதற்கிடையில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு அரசியல் தலைவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதனை குறிப்பிட்டு மாநகர குற்றவியல் வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு மீது உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.