தமிழகத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு மார்ச் 13-ம் தேதி தொடங்கிய ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவ-மாணவிகள் எழுத இருக்கும் நிலையில், தற்போதைய தேர்வுக்கான முன்னேற்பாடுகளை தேர்வுத்துறை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் விடைத்தாள் மதிப்பீடு குறித்து தற்போது தேர்வுத்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி 12-ம் மாணவர்களுக்கான விடைத்தாள் மதிப்பீடு ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கும் நிலையில், இப்பணியை ஏப்ரல் 21-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. இதேபோன்று 11-ம் வகுப்பு பொது தேர்வு விடைத்தாள் மதிப்பீடு ஏப்ரல் 24-ம் தேதி தொடங்கும் நிலையில் மே 4-ம் தேதிக்குள் பணியை முடிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. மேலும் 11-ம் வகுப்புக்கான அரியர் விடைத்தாள்கள் மதிப்பீட்டை ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 21-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனவும் ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.