சென்னையில் வெள்ளத்தை தடுக்க பரிந்துரைகள் அளித்த திருப்புகழ் குழுவை முதல்வர் ஸ்டாலின் பாராட்டினார். சென்னை வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உரையாற்றிய போது “அனைவரும் தொடர்ந்து செயல்பட்டு 80 சதவீதம் வெள்ளத்தடுப்பு பணிகளை முடித்ததால் தான் எங்கும் தண்ணீர் தேங்காமல் அரசுக்கு நற்பெயர் கிடைத்தது.

இதற்கு திருப்புகழ் ஐஏஎஸ் மற்றும் அவரது குழு உறுப்பினர்கள் தான் பிரதான காரணம் என அவர் பாராட்டினார். மேலும் இளைய தலைமுறையினர் தேவைக்கு மட்டுமே தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டுமே தவிர்த்து, தொழில்நுட்ப அடிமைகளாக மாறிவிடக்கூடாது என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.