அரியலூரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் புதிதாக 22 கோடி மதிப்பீட்டின் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்திற்கு நீட் தேர்வை எதிர்த்து போராடி உயிரை மாய்த்த மாணவி அனிதாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அரியலூர் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொல். திருமாவளவன் ‌கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசியதாவது, ரூ. 22 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய அரங்கிற்கு மாணவி அனிதாவின் பெயரை வைத்துள்ளது ஆறுதல் தருகிறது. தற்போது நீட் தேர்வை எதிர்த்து தமிழ்நாடே போராடும் நிலையில் அந்த போராட்டத்தின் அடையாளமே அனிதா தான் என்று கூறினார்.