தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. நேற்று தொடங்கிய 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் மொழி தேர்வை 50,674 பேர் எழுதவில்லை என பள்ளிக் கல்வித் துறை தகவல் தெரிவித்துள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் முதல் தாள் தேர்வு பள்ளி மாணவர்கள் 49,559 பேரும், தனித் தேர்வர்கள் 1115 பேரும் தேர்வு எழுத வரவில்லை என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. நேற்று நடைபெற இருந்த தேர்வில் மொத்தம் 8,51,303 மாணவ மாணவிகள் பங்கேற்க இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று பிளஸ் டூ பொதுத்தேர்வில் தமிழ் தேர்வு எழுத மாணவர்களுக்கு மறு வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நேற்று தமிழ் மொழி பாடத் தேர்வை ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதாத நிலையில் அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த செய்தி தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.