மே 20 கிரிகோரியன் ஆண்டின் 140 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 141 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 225 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

325 – கிறித்தவத் திருச்சபையின் முதலாவது கிறித்தவப் பொதுச் சங்கம், நிக்கேயா பேரவை அமைக்கப்பட்டது.1217 – இங்கிலாந்து லிங்கன் நகரப் போரில், பிரான்சின் இளவரசர் லூயி (பின்னாளைய எட்டாம் லூயி) பெம்புரோக் பிரபு வில்லியம் மார்சலிடம் தோல்வியடைந்தார்.

1497 – ஜான் கபோட் இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரில் இருந்து மேற்கு நோக்கிய வழியைக் கன்டுபிடிப்பதற்காக மெத்தியூ என்ற கப்பலில் புறப்பட்டார்.

1498 – போர்த்துக்கீச மாலுமி வாஸ்கொ ட காமா இந்தியாவின் கோழிக்கோடு நகரை அடைந்தார்.[1]

1521 – பாம்பெலூனா நகரில் இடம்பெற்ற போரில் லொயோலா இஞ்ஞாசி காயமடைந்தார்.

1570 – உலகின் முதலாவது நவீன நிலப்படத் தொகுப்பை நிலப்படவரைவியலாளர் ஆபிரகாம் ஓர்ட்டேலியசு வரைந்தார்.

1605 – உரோமைச் சேர்ந்த கத்தோலிக்க குரு தத்துவ போதக சுவாமிகள் மதப்பரப்புனராக கோவா வந்து சேர்ந்தார்.

1631 – முப்பதாண்டுப் போர்: செருமனியின் மாக்டபூர்க் நகரை புனித உரோமைப் பேரரசு கைப்பற்றி அந்நகர மக்களின் பெரும்பான்மையோரைப் படுகொலை செய்தது.

1802 – பிரான்சின் முதலாம் நெப்போலியன் பிரெஞ்சுக் குடியேற்ற நாடுகளில் அடிமை முறையை மீண்டும் கொண்டுவந்தான்.

1813 – நெப்போலியன் பொனபார்ட் பிரெஞ்சுப் படைகளுடன் செருமனியின் சாக்சனி நகரில் நுழைந்து உருசியா, மற்றும் புரூசியாப் படைகளுடன் போரில் ஈடுபட்டு வெற்றி பெற்றான்.

1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கென்டக்கி மாநிலம் நடுநிலை வகிப்பதாக அறிவித்தது. செப்டம்பர் 3 இல் கூட்டமைப்புப் படைகள் ஆக்கிரமிக்கும் வரை இந்நிலை நீடித்தது. வட கரொலைனா ஒன்றியத்தில் இருந்து விலகியது.

1869 – யாழ்ப்பாணத்தில் தொலைத்தொடர்பு இணைப்பு வேலை நிறைவடைந்தது.[2]

1873 – லேவி ஸ்ட்ராவுஸ், ஜேக்கப் டாவிஸ் ஆகியோர் இணைந்து செப்புத் தட்டாணியுடனான நீல ஜீன்சுக்கான காப்புரிமம் பெற்றனர்.

1875 – அனைத்துலக முறை அலகுகள் முறைமையை ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் 17 நாடுகள் கையெழுத்திட்டன.

1882 – செருமானியப் பேரரசு, ஆத்திரியா-அங்கேரி, இத்தாலி இராச்சியம் ஆகியன முத்தரப்புக் கூட்டணியை ஏற்படுத்தின.

1883 – கிரக்கத்தோவா எரிமலை வெடிக்க ஆரம்பித்தது. அடுத்த மூன்று மாதங்களில் 36,000 பேர் உயிரிழந்தனர்.

1891 – திரைப்பட வரலாறு: தாமசு ஆல்வா எடிசன் தனது முதலாவது உடல் அசைவு ஒளிப்படக்கருவியைக் காட்சிப்படுத்தினார்.

1902 – ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்து கியூபா விடுதலை பெற்றது. தொமாஸ் பால்மா முதலாவது அரசுத் தலைவரானார்.

1927 – மன்னர் அப்துல்லா பின் அப்துல் அசீசின் ஹெஜாஸ், நாச்து இராச்சியங்கள் மீதான இறைமையை ஐக்கிய இராச்சியம் அங்கீகரித்தது. இவை பின்னர் சவூதி அரேபியா இராச்சியமானது.

1940 – பெரும் இன அழிப்பு: முதல் தொகுதி சிறைக்கைதிகள் அவுஷ்விட்ஸ் வதை முகாமை வந்தடைந்தனர்.

1941 – இரண்டாம் உலகப் போர்: கிரீட் சண்டை: செருமனியப் படைகள் கிரீட் நகரைக் கைப்பற்றின.

1948 – சீனக் குடியரசின் முதலாவது அரசுத்தலைவராக சங் கை செக் தேர்தெடுக்கப்பட்டார்.

1956 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது ஐதரசன் குண்டு பசிபிக் பெருங்கடலில் பிக்கினி திட்டில் போடப்பட்டது.

1964 – பிரபஞ்ச நுண்ணலைக் கதிர்வீச்சை இராபெர்ட் உட்ரோ வில்சன் கண்டுபிடித்தார்.

1965 – எகிப்தில் கெய்ரோ நகரில் பாக்கித்தானிய வானூர்தி தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில் 119 பேர் கொல்லப்பட்டனர்.

1971 – பாக்கித்தான் படைகள் சுக்நகர் என்ற இடத்தில் வங்காள இந்துக்களைப் படுகொலை செய்தனர்.

1980 – கியூபெக் மாநிலத்தில் இடம்பெற்ற பொது வாக்கெடுப்பில் கனடாவில் இருந்து விடுதலை பெறுவதற்கு எதிராக 60 விழுக்காட்டினர் வாக்களித்தனர்.

1983 – எயிட்சு நோயை உண்டாக்கும் எச்.ஐ.வி தீ நுண்மங்களைக் கண்டுபிடித்த செய்திகள் முதற் தடவையாக வெளியிடப்பட்டன.

1983 – தென்னாப்பிரிக்காவின் தலைநகர் பிரிட்டோரியாவில் உம்கொன்ரோ வெய் சிசுவே இயக்கத்தினரால் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 19 பேர் கொல்லப்பட்டனர், 217 பேர் காயமடைந்தனர்.

1985 – வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா கியூபாவுக்கான வானொலி சேவையை ஆரம்பித்தது.

1989 – 1989 தியனன்மென் சதுக்கம் எதிர்ப்புப் போராட்டங்கள்: சீனாவில் இராணுவச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

1990 – உருமேனியாவில் கம்யூனிச ஆட்சிக்குப் பின்னர் முதல்தடவையாக அரசுத்தலைவர், மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் இடம்பெற்றன.

2002 – கிழக்குத் தீமோரின் விடுதலையை போர்த்துக்கல் அங்கீகரித்தது. 23 ஆண்டுகால இந்தோனீசிய ஆட்சி, மற்றும் மூன்றாண்டு கால ஐநாவின் தற்காலிக ஆட்சி முடிவுக்கு வந்து கிழக்குத் திமோர் விடுதலை பெற்றது.

2012 – வடக்கு இத்தாலியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 27 பேர் உயிரிழந்தன்ர்.

2013 – அமெரிக்காவில் ஒக்லகோமா நகரில் வீசிய சுழற்காற்றினால் 24 பேர் உயிரிழந்தனர், 27 பேர் காயமடைந்தனர்.

இன்றைய தின பிறப்புகள்

1743 – டூசான் லூவர்சூர், எயித்தியப் புரட்சித் தலைவர் (இ. 1803)1799 – பல்சாக், பிரான்சிய எழுத்தாளர் (இ. 1850)

1825 – ஜார்ஜ் பிலிப்சு பாண்டு, அமெரிக்க வானியலாளர் (இ. 1865)

1845 – அயோத்தி தாசர், தமிழகத் தமிழறிஞர் (இ. 1914)

1851 – யமஹா, டொரகுசு, சப்பானியத் தொழிலதிபர் (இ. 1916)

1860 – எடுவர்டு பூக்னர், நோபல் பரிசு பெற்ற செருமானிய வேதியியலாளர் (இ. 1917)

1894 – சந்திரசேகர சரசுவதி, காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது தலைவர் (இ. 1994)

1908 – ஜேம்ஸ் ஸ்டுவர்ட், அமெரிக்க நடிகர் (இ. 1997)

1923 – எம். டி. இராமநாதன், இந்திய கருநாடக இசைப்பாடகர் (இ. 1984)

1928 – மகாராஜபுரம் சந்தானம், கருநாடக இசைப் பாடகர் (இ. 1992)

1935 – ஒசே முகிக்கா, உருகுவாயின் 40வது அரசுத்தலைவர்

1938 – காரை சுந்தரம்பிள்ளை, ஈழத்துக் கவிஞர், எழுத்தாளர் (இ. 2005)

1939 – பாலு மகேந்திரா, இலங்கை-இந்தியத் திரைப்பட இயக்குநர், ஒளிப்பதிவாளர் (இ. 2014)

1941 – கோ சொக் டொங், சிங்கப்பூரின் 2-வது பிரதமர்

1950 – சாலா நாத் கனால், நேபாள அரசியல்வாதி, பிரதமர்

1953 – ராம்லி இப்ராஹிம், மலேசிய பரத நாட்டியக் கலைஞர்

1957 – யோஷிஹிகோ நோடா, சப்பானின் 62வது பிரதமர்

1981 – இக்கர் கஸிலஸ் பெர்னாண்டஸ், எசுப்பானியக் காற்பந்து வீரர்

இன்றைய தின இறப்புகள்

1506 – கொலம்பசு, அமெரிக்காவைக் கண்டுபிடித்த இத்தாலிய கடல் பயணி (பி. 1451)1766 – மல்கர் ராவ் ஓல்கர், மராட்டியப் பேரரசர் (பி. 1693)

1924 – போகடு கான், மங்கோலியப் பேரரசர்

1947 – பிலிப் எட்வர்ட் ஆன்டன் வான் லெனார்ட், நோபல் பரிசு பெற்ற சிலோவாக்கிய-செருமனிய இயற்பியலாளர் (பி. 1862)

1957 – த. பிரகாசம், சென்னை மாகாண முதல்வர், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1872)

1959 – சா. தருமாம்பாள், தமிழக அரசியல்வாதி, சமூக செயற்பாட்டாளர் (பி. 1890)

1978 – பி. சா. சுப்பிரமணிய சாத்திரி, தமிழக சமக்கிருத, தமிழறிஞர், உரையாசிரியர் (பி. 1890)

2004 – எம். ஏ. குலசீலநாதன், ஈழத்து கருநாடக, மெல்லிசைப் பாடகர் (பி. 1940)

2005 – செம்பியன் செல்வன், ஈழத்து எழுத்தாளர் (பி. 1943)

2008 – பால்ராஜ், விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி (பி. 1965)

இன்றைய தின சிறப்பு நாள்

உலக தேனீ தினம்நினைவு நாள் (கம்போடியா)

விடுதலை நாள் (கிழக்குத் திமோர், இந்தோனேசியாவிடம் இருந்து 2002)