இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளத்தில் தினம்தோறும் புது விதமான வீடியோக்கள் வைரலாகி கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக செல்ல பிராணிகள் மற்றும் விலங்குகளின் வீடியோவிற்கு நினைவே இருக்காது. தற்போது குளத்தில் ஆனந்த குளியல் போட்ட ஒரு யானையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. யானைகள் என்னதான் பார்ப்பதற்கு கம்பீரமாக இருந்தாலும் குழந்தைகள் போல் அவை செய்யும் சில சேட்டைகள் காண்போரை ரசிக்க வைக்கும். அதன்படி தற்போது யானையின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

வனப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் தாங்கள் கொண்டு வந்த பாட்டில்களை கவனக்குறைவாக விட்டுச் செல்கின்றனர். அப்போது அங்கு வந்த யானை ஒன்று பிளாஸ்டிக் பாட்டிலை நசுக்கி அதிலிருந்து வந்த தண்ணீரை எடுத்து அருந்துகிறது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த யானை அந்த பிளாஸ்டிக் பாட்டிலை உட்கொள்ளவில்லை. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் பலரும் இனிமேல் யாரும் தண்ணீர் பாட்டிலை வனப்பகுதிக்குள் கொண்டு சென்றால் தூக்கி வீசி விட்டு வராதீங்க என கூறி வருகின்றனர்.