கடவுள் ராமர், சீதை மற்றும் ஹனுமன் பற்றி அவதூறு செய்து கவிதை வெளியிட்டதாக இயக்குநர் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் விடுதலை சிகப்பி மீது சென்னை காவல்துறையினர் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். சென்னை ஆர்.கே புரத்தில் வானம் கலைத் திருவிழா எனும் நிகழ்ச்சியில் மலக்குழு மரணம் என்ற தலைப்பில் விடுதலை சிகப்பி என்பவர் கவிதை ஒன்றை வாசித்தார்.

அதாவது, கடவுள் ராமர், லட்சுமணர் மற்றும் ஹனுமனை அவதூறு செய்து மற்றும் இழிவுபடுத்தி கவிதையை வாசித்தார். இது ஹிந்துக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்நிலையில் புகாரின்படி கலகத்தை தூண்டுதல், எந்த ஒரு மதத்தினரையும் புண்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் விடுதலை சிகப்பி மீது சென்னை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.