தமிழ் திரையுலகில் 80-களில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் தான் சீதா. இவர் ஆண்பாவம் எனும் படத்தின் வாயிலாக அறிமுகமாகி பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். பிஸியாக நடித்து வந்த சீதாவின் திரைப் பயணம் பாதியிலேயே முடிந்ததற்கு இவரது திருமண வாழ்க்கைதான் காரணம். கடந்த 1989-ம் வருடம் இவருக்கும் நடிகர் பார்த்திபனுக்கும் திருமணம் நடைபெற்றது.

இதையடுத்து சீதா நடிப்பது பார்த்திபனுக்கு பிடிக்கவில்லை என்பதால் நடிப்பதை நிறுத்தி உள்ளார். இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். 10 வருடங்களுக்கு பின் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். 2001-ஆம் வருடம் விவாகரத்து ஆன பிறகு மீண்டும் நடிக்க வந்த சீதா, அடுத்து சீரியல் நடிகர் சதீஷை மறுமணம் செய்தார்.

அத்திருமணமும் சீதாவிற்கு சரியாக அமையாமல் விவாகரத்து பெற்றனர். சமீபத்தில் பேட்டி ஒன்றில் சீதா கூறியதாவது, யாராக இருந்தாலும் அவர்களுக்கு என ஒரு அடையாளம் வேண்டும். அடையாளம் உள்ள இடத்திலிருந்து நாம் விலகிப்போனால் பிறகு அந்த இடத்தை பிடிப்பது மிகவும் கடினம். திருமணத்துக்கு பின் நடிப்பை நிறுத்தியது என்னுடைய வாழ்க்கையில் நான் செய்த மிகப் பெரிய தவறு என அவர் பேசியுள்ளார்.