திரைத்துறையினர் பலரை இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அடுத்தடுத்து விமர்சித்து வரும் நிலையில், இசைஞானி இளையராஜா குறித்தும் அவர் பேசியுள்ளார். அதிலும் குறிப்பாக இளையராஜா பொது மேடைகளில் பேசும் விதத்தை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்நிலையில் இசையமைப்பாளரான அனிருத்தை தாக்கி பேசியுள்ளார் ஜேம்ஸ்.

அதாவது, அனிருத் பாடல்கள் தொடர்ந்து ராக், அதிரடி இசையாக மட்டும்தான் இருக்கிறது. தொடர்ந்து அதைக்கொண்டு எவ்வளவு நாள் ஓட்டமுடியும். அந்த அளவிற்கு ரசிகர்களுக்கு பிடிப்பதால் தான் அதை அவர் செய்கிறார் என அனைவரும் கூறினாலும் அனிருத் மெலோடி, குத்து பாட்டு என மற்ற விதமாகவும் பாடல்கள் கொடுக்கவேண்டும் என ஜேம்ஸ் வசந்தன் கூறியிருக்கிறார். பிரியாணியே என்றாலும் ஒருநாள் சாப்பிட்டால் தான் நன்றாக இருக்கும். தினசரி சாப்பிட்டால் எப்படி இருக்கும் எனவும் அவர் கேட்டிருக்கிறார்.