அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி அணியில் தற்போது பாஜக மற்றும் அமமுகவில் இருந்து பலர் இணைந்து வருகிறார்கள். கடந்த 2 வருடங்களில் அமமுக கட்சியைச் சேர்ந்த டிடிவி தினகரனின் முக்கிய நம்பிக்கை நட்சத்திரங்கள் பலர் எடப்பாடி பழனிச்சாமி அணியில் இணைந்துள்ளனர். இதனால் தற்போது டிடிவி தினகரன் உஷாராகியுள்ளார். அவர் தனக்கு மிக நெருக்கமாக இருக்கும் நிர்வாகிகளுக்கு தற்போது கட்சியில் முக்கிய பதவிகளை வழங்கியுள்ளார்.

அதன்படி கரிகாலனை அமமுக அமைப்பு பொதுச்செயலாளராக நியமித்துள்ளார். அதன் பிறகு இளம் பெண்கள் பாசறை செயலாளராக மேனகாவும், தொழில்நுட்ப மகளிர் பிரிவு தலைவராக ஜெசிமா மானுவும், எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளராக சதீஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் அமமுக கட்சியில் இருந்து பலர் எடப்பாடி அணியில் இணைவது தற்போது டிடிவி தினகரனுக்கு பெரும் நெருக்கடியை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.