நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவுடன் கூட்டணி அமைக்கும் எண்ணம் உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சீமான் கூறியதாவது, எனக்கு அரசியலில் பேச கற்றுக் கொடுத்ததே திருமாவளவன் தான்.

அவர் தற்போது திராவிட கட்சிகளுடன் கூட்டணியில் இருப்பதால் அவரால் தவறுகளை சுட்டிக் காட்ட முடியவில்லை. எதிர்காலத்தில் அண்ணன் தம்பி எல்லோரும் சேர்ந்து போட்டியிடலாம் என அவர் கூறினால் கண்டிப்பாக நான் சரி என்று கூறுவேன் என்று கூறினார். மேலும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் தற்போது கூட்டணி அமைக்க தயார் என்று கூறிய நிலையில் அந்த கூட்டணி சாத்தியமாகுமா என கேள்வி எழுந்துள்ளது.