ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ராஜமௌலி டைரக்டில் வெளியாகிய படம் “ஆர்ஆர்ஆர்”. இந்த படம் உலகம் முழுவதும் கடந்த வருடம் மார்ச் 25ம் தேதி வெளியாகியது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிய இந்த படம் நல்ல விமர்சனங்கள் பெற்று வசூல் சாதனையும் நிகழ்த்தியது. அண்மையில் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் இறுதி பட்டியலில் ஆர்ஆர்ஆர் படத்தின் “நாட்டு நாட்டு” பாடல் பரிந்துரைக்கப்பட்டது. அதன்பின் நேற்று 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்தது. இதில் சிறந்த பாடல் பிரிவில் ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருதானது வழங்கப்பட்டது. இதனால் இப்படத்திற்கு பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்

இந்நிலையில் ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் தமிழ் குறும்படம் ஆஸ்கர் வென்றதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வாழ்த்து தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், குறும்படத்திற்கு கிடைத்த ஆஸ்கர் மூலம் தமிழகத்திற்கு பெருமை. தமிழக அரசியலில் 2, 3 பேர் சிறப்பாக நடிக்கின்றனர். அவர்களை ஆஸ்கருக்கு செலக்ட் செய்தால் நன்றாக இருக்கும். இன்னும் நிறைய நடிகர் திலகங்கள் இருக்கிறார்கள் என அவர் விமர்சித்தார்.