மத்திய அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு நாடு முழுவதும் தேர்வுகள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தேர்வுகளில் தமிழக இளைஞர்கள் அதிகம் தேர்ச்சி பெற்று அரசு பணியில் இருக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒன்றுதான் தமிழக அரசின் நான் முதல்வன் திட்டம். இந்த திட்டத்தின் மூலமாக போட்டி தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு உதவி தொகை வழங்கப்படுகிறது.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் முதல்வன் போட்டி தேர்வுகள் பிரிவு மூலமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஊக்கத்தொகை திட்டத்தை யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகும் தமிழக இளைஞர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் இந்த திட்டத்தில் சேர்ந்து பலன் பெற https://nmcep.tndge.org என்ற இணையதளம் மூலம் இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் மேலும் கூடுதல் விவரங்களுக்கு 9043710214 / 9043710211  என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.