தமிழக சட்டப் பேரவையில் மனிதவளத்துறை மானிய கோரிக்கை மீது நேற்று நடைபெற்ற விவாதத்தில் பேசிய முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன், சட்டமன்ற உறுப்பினர்களுக்கான மாதாந்திர ஊதியத்தை உயர்த்த கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்து அவை முன்னவர் துரைமுருகன் பேசியதாவது “உங்களை (எம்எல்ஏக்ளை) விட எங்களுக்கு (அமைச்சர்களுக்கு) குறைவா தான் சம்பளம் வருகிறது.

அதையும் கும்பாபிசேகத்திற்கு நிதி குடுன்னு மஞ்சப்பையோட வந்து காலையிலே வாங்கிட்டு போயிடுறாங்க” என நகைச்சுவையுடன் பதிலளித்தார். சட்டமன்ற உறுப்பினர்களுக்குரிய மாதாந்திர ஊதியத்தை அதிகரிக்கவேண்டும் என்றும் ஒன்றிய தலைவர்களுக்கு கார் வழங்கப்படுவதை போன்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கார் வழங்க வேண்டும் என்றும் முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் கோரிக்கை வைத்தார்.