கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள விறுவாகம் ஜெ.ஜெ நகர் பகுதியில் முடி திருத்தும் தொழிலாளியான லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் லட்சுமணன் உள்பட 7  பேர் அப்பகுதியில் இருக்கும் அய்யனார் கோவில் திருவிழாவின் போது பக்தர்களுக்கு மொட்டை அடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து பணத்தைப் பிரித்துக் கொள்வதில் லட்சுமணனுக்கும், அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு  இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர். இதுகுறித்து இரு தரப்பினரும் தனித்தனியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் லட்சுமணன் சந்தோஷ் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.