தமிழ்நாடு முழுவதும் குறிப்பிட்ட தொழிற்சங்கத்தை சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத்தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும்.

இதனையடுத்து காலி பணியிடங்களை நிரப்பி, பணியில் இருக்கும் போது உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலை கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. அதன்படி கடலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தொழிற்சங்க நிர்வாகிகள் சிலர் ஒன்று சேர்ந்து பேருந்து இயக்க முயன்றவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தகராறு ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் கழித்து போலீஸ் பாதுகாப்போடு பேருந்துகள் இயக்கப்பட்டது.