தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பூசாலிகொட்டாய் பகுதியில் கணேசமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தாத்தா பெயரில் இருக்கும் 18 சென்ட் நிலத்தின் சிட்டா ஆவணத்தில் கமலேசன் என்பவர் பெயர் தவறுதலாக சேர்க்கப்பட்டிருப்பதாகவும், அந்த பெயரை நீக்கம் செய்து தர வேண்டும் என நூல அள்ளிகிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

அப்போது கிராம நிர்வாக அலுவலரான வெங்கடேசன் சிட்டாவில் பெயர் நீக்கம் செய்ய 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து கணேசமூர்த்தி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி கணேசமூர்த்தி வெங்கடேசனிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் வெங்கடேசனை கையும் களவுமாக கைது செய்தனர்.