மதுரை மாவட்டத்தில் நடைபெறக்கூடிய ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க விரும்பும் காளைகள், மாடுபிடி வீரர்கள் நாளை பிற்பகல் 12 மணி வரை முன்பதிவு செய்யலாம். http://madurai.nic.in என்ற இணையத்தளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காளை உரிமையாளருக்கும், மாடுபிடி வீரருக்கென தனித்தனியாக உள்ள பிரிவுகளில் முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. முறைகேடுகளை தடுக்க QR code இணைப்புடன் டோக்கன் வழங்கப்படுகிறது.