மதுரை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட சூடியூர்-பரமக்குடி இடையே ரயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் அந்த பாதையில் இயக்கப்படும் ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி- ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி எண் (16849/16850) மானாமதுரை ராமநாதபுரம் இடையே ரத்து செய்யப்பட்டு மானாமதுரை வரை மட்டுமே இயக்கப்படுகிறது.

இன்று முதல் 13-ஆம் தேதி வரை, 15-ஆம் தேதி, 17-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி, 22-ஆம் தேதி, 24-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை, மற்றும் 29-ஆம் தேதி ஆகிய நாட்களில் இரு மார்க்கங்களிலும் இந்த ரயில் மானாமதுரை வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மானாமதுரையில் இருந்து திருச்சி செல்லும் ரயில் வழக்கமான நேரத்தில் புறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது