இந்தியாவில் வட மாநிலங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருவதாக சமீப காலமாகவே புகார்கள் அதிகரித்து வருகிறது. தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால் அதை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்நிலையில் டெல்லியில் தெரு நாய்கள் கடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் இருந்து வெளியே வந்த ஆனந்த்தை (7) தெரு நாய்கள் கடித்து குதறியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த துயரத்தில் இருந்து குடும்பத்தினர் மீள்வதற்குள் இன்று ஆனந்தின் சகோதரரான ஆதித்யாவை (5) தெரு நாய்கள் கடித்து குதறியதில் அந்த குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்களை அடுத்தடுத்து தெரு நாய்கள் கடித்ததில் இருவரும் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.