திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில் இதமான சீதோசன நிலவி வருவதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

மோயர் பாய்ண்ட் செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா, வெள்ளி நீர்வீழ்ச்சி, குணா குகை முயல் பாயிண்ட் உள்ளிட்ட இடங்களை கண்டு ரசித்தனர். இதனையடுத்து நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும் குதிரை சவாரி செய்தும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கொடைக்கானலில் சாரல் மழை பெய்து இதமான சூழல் நிலவுவதால் சுற்றுலா பயணம் உற்சாகமடைந்தனர்.