கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 100 அடி ரோடு ஒன்பதாவது வீதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டு தண்ணீர் மீட்டர் பாக்ஸில் 4 அடி நீளமுள்ள பாம்பு பதுங்கி இருந்தது. இதனை பார்த்ததும் சுப்பிரமணி பாம்பு பிடி வீரரான சஞ்சய் என்பவருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சஞ்சய் சுமார் நான்கு அடி நீளம் உள்ள சாரைப்பாம்பை லாவகமாக பிடித்தார். பின்னர் பிடிபட்ட பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அந்த பாம்பு வனத்துறையினர் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் அந்த பாம்பை காட்டு பகுதியில் கொண்டு விட்டனர்.