கடலூர் மாவட்டத்தில் உள்ள வல்லம் அறிஞர் அண்ணா தெருவில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்பு செல்வன் என்ற மகன் உள்ளார். இவர் சிவமணி என்பவரிடம் கடனாக முந்திரி வாங்கி ஏற்றுமதி செய்து வந்தார். இந்நிலையில் அன்பு செல்வனுக்கும் சிவமணிக்கும் இடையே தொழில் ரீதியாக முன்விரோதம் ஏற்பட்டது.

சம்பவம் நடைபெற்ற அன்று சிவமணி அவரது நண்பர்கள் மூன்று பேர் இணைந்து அன்பு செல்வனை கத்தியால் குத்தி உள்ளனர். இதனால் காயமடைந்த அன்பு செல்வன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிவமணி, வெங்கடேசன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மற்ற இரண்டு பேரை தேடி வருகின்றனர்.