கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கும் கோவை குற்றாலம் அருவியில் ஆண்டு முழுதும் தண்ணீர் வரத்து இருக்கும். இங்கு கோவை, நீலகிரி மற்றும் இல்லாமல் திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வந்து செல்கின்றனர். கடந்த சில நாட்களாக கன மழை பெய்ததால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் வனத்துறையினர் பொதுமக்கள் அருவியில் குளிப்பதற்கு தடை விதித்தனர். இந்நிலையில் கோவை குற்றாலம் அருவியில் நீர்வரத்து இயல்பு நிலைக்கு திரும்பியதால் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். இதனால் பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து கோவை குற்றாலம் அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.