நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மங்களபுரத்தில் செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சேலம் வடக்கு போக்குவரத்து பிரிவில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது செல்வம் சேலம் கமிஷனர் அலுவலகம் அருகே இருக்கும் காவலர் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட செல்வம் மருத்துவ விடுப்பில் இருந்தார். நேற்று இரவு திடீரென செல்வதற்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக குடும்பத்தினர் செல்வத்தை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்து டாக்டர்கள் செல்வம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.